ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;
என்ன நைநா.. காலையில் காபிக்குப் பதிலாக ஏதோ பானம்..? வேறொன்றுமில்லை எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீர்தான். இது உடலை சுத்தமாக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு கூடுதல் நீரேற்றம் மற்றும் நோயெதிர்ப்பு தேவைப்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதனால் தான் இந்த சுவைநீர். ஆமாம் உன் மகளை ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்த்திருந்தியே என்ன ஆச்சு.. சிசேரியன் தான். தாயும் சேயும் நலம். ஆனால் என்ன கொஞ்சம் பீஸ் அதிகமாச்சு. மருத்துவக்கட்டணத்தை விடு. தாயும் சேயும் நலமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படு. நாட்டில் நடக்கும் பிரசவங்களில் சராசரியாக 21.5 சதவிகிதம் சிசேரியன் மூலம் நடக்கிறதாம். அதிகபட்சமாக தெலங்கானாவில் 60.7 சதவிகிதம் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழகம் 44.9 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆந்திரம் 42.4 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்திலும், கேரளம் 38.9 சதவிகிதத்துடன் நான்காவது இடத்திலும் கர்நாடகத்தில் 31.5 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இது மட்டுமா, 2030ஆம் ஆண்டில், உலகிலேயே, அதிக சிசேரியன் அறுவைசிகிச்சை நடக்கும் நாடாகவும் இந்தியா மாறிவிடும் என்றும் இந்த தரவுகள் எச்சரிக்கின்றன. ;