மிரட்டும் மருந்துவிலை உயர்வு
மிரட்டும் மருந்துவிலை உயர்வு

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை

பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிது புதிதாக உருவாகும் நுண்கிருமிகளின் பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றால் இன்றைய சூழலில் ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியாலேயே பல பேருடைய வாழ்நாட்காலம் நீடித்து வருகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கு, தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் வாங்கி பயன்படுத்த முடியும்.


 வாட்தாத்தா? கொழுப்பு உடம்புக்கு நல்லதா...?
வாட்தாத்தா? கொழுப்பு உடம்புக்கு நல்லதா...?

கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்

குட் மார்னிங் தாத்தா.. சொல்லி முடிக்கும் முன் கொட்டாவி வந்தது பேத்திக்கு. இப்பவெல்லாம் நைட்டில் சரியான தூக்கமே இல்லை தாத்தா.. இத்தனைக்கும் ஓ.டி.டியில புதுப் படம் பார்த்துட்டு கொஞ்சநேரந்தான் ரீல்ஸ் பார்த்தேன்... அப்படியே கொஞ்சநேரம் மீம்ஸ் பாத்திருந்தேனா விடிஞ்சிருக்கும்... பல்ல விளக்கி காபிய குடிச்சிருக்கலாம். படிச்சுட்டு, சாப்பிட்டதும் படுத்தா தூக்கம் வரும். அதவிட்டுட்டு தூக்கம் வரலையாம். அதோட உன் அறையில் இரவில் தூங்கும் போதும் அதிக வெளிச்சமுள்ள விளக்குகளைப் போட்டுக்கொண்டு தூங்குகிறாய். இரவில் இப்படி வெளிச்சமுள்ள விளக்குகளைப் போட்டுக்கொண்டு தூங்கினால் தூக்கம் தொலைந்து போய்விடும் என சீனாவைச் சேர்ந்த எஸ்.யு.எஸ்.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எந்த நகரங்களில் இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் உள்ளதோ அங்கெல்லாம் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அதிகமுள்ளதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. அதுசரி, உன் அறையில் எவ்வளவு நெகிழி குப்பைகள் சேர்ந்திருக்கு பார்த்தியா, மொதல்ல அப்படிச் சேராம பார்த்துக்கோ...

January  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

மிரட்டும் மருந்துவிலை உயர்வு

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை

பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிது புதிதாக உருவாகும் நுண்கிருமிகளின் பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றால் இன்றைய சூழலில் ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியாலேயே பல பேருடைய வாழ்நாட்காலம் நீடித்து வருகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கு, தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் வாங்கி பயன்படுத்த முடியும்.

தலையங்கம் கட்டுரைகள்

சமூகம்

பெண்கள்

பொங்கல் பன்முகப் பார்வை

சண்முக. ஞானசம்பந்தன் நிகழ்ச்சி பொறுப்பாளர் (பணிநிறைவு) மதுரை வானொலி

வாசகர்களுக்குப் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கல் திருநாளை தை முதல் நாள் கொண்டாடுகிறோம். பொங்கல் என்ற சொல் நேரடியாகத் தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. சினம் பொங்குவதையும் மேகங்கள் பொங்கி மழை பொழிவதையும் சுட்டத்தான் இந்தச் சொல்லை சங்க இலக்கியந் தொட்டு மகாகவி பாரதியார் ஈறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். மாறாக, தை என்னும் சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணக் கிடைக்கிறது. “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்”என்று குறுந்தொகையும், “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் பேசும்.

பெண்கள் கட்டுரைகள்

சுற்றுச்சூழல்

அகிலத்தின் அச்சாணி

வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர் நமது மண்வாசம்

நமது விவசாய முறைகள், நமது பாரதத்தின் தனித்தன்மையை உலகளவில் பறைசாற்றும் அம்சங்களில் ஒன்று. அவை, இந்தியாவின் பொருளாதரார, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. விவசாய உற்பத்தி சார்ந்த நமது இலக்குகள் கிராமப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு மட்டுமன்றி, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அடிப்டையாகக் கொண்டுள்ளன. இந்திய அரசின் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கையின்படி (2023 - 24), நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுமார் 18.2 சதவிகிதம் விவசாயம் பங்களிக்கிறது. அது மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதார தளத்தில் 42.3 சதவிகித மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன.

சுற்றுச்சூழல் கட்டுரைகள்

பாரம்பரியம்

நீடித்த சுற்றுலா வளர்ச்சியை நோக்கி...

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்

ஊர் சுற்ற யாருக்குத்தான் பிடிக்காது. அது அர்த்தமுள்ளதாக மாறும்போது சுற்றுலாவாகிறது. இது வேலைகளை உருவாக்குகிறது, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது, உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது மற்றும் இயற்கை சூழல் மற்றும் கலாச்சார சொத்துக்கள் மற்றும் மரபுகளை பாதுகாக்க உதவுகிறது மற்றும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை குறைக்க வழிவகுக்கிறது.இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அன்னிய செலாவணி அதிகரிப்பு ஆகியவற்றுக்குச் சுற்றுலா வளர்ச்சி மிக முக்கிய பங்களிக்கிறது. மேலும் சமூக நல்லிணக்கம், பரவலான வளர்ச்சி மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கிறது.