நமது மண்வாசம் வழங்கிய இலக்கிய விருந்து

நமது மண்வாசம் வழங்கிய இலக்கிய விருந்து

மீ.ராமசுப்பிரமணியன், பத்திாிகையாளா்;

பட்டறிவு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் நமது மண்வாசம் இதழின் பத்தாம் ஆண்டு விழா தானம் அறக்கட்டளையின் ஐக்கிய அலுவலகத்தில் சூலை 26ஆம் நாள் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சம் பத்தாவது ஆண்டையொட்டி பத்து நூல்கள் வெளியிட்டதுதான். நமதுமண்வாசம் இதழுக்கும் வாசகர்களுக்கும் இடையேயான பிணைப்பு வலுவானது. வாசகர்களை எழுதவைப்பதும், அவர்களின் தரமான படைப்புகளை நமது மண்வாசத்தில் வெளியிடுவதையும், வெளியிட்டதை அவர்களுக்கு நூலாக்கித் தருவதையும் நமது மண்வாசம் எழுத்து வேள்வியாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில் இந்த ஆண்டுவிழாவையொட்டி எழுத்தாளர்கள் பகவதி மோதிலால், முனைவர் ராணிச் சக்ரவர்த்தி, எழுத்தாளர் தேனம்மை ஆகியோரது படைப்புகள் நூலாக வெளியிடப்பட்டன. நமது மண்வாசம் இதழாசிரியர் ப. திருமலை, கடந்த பத்தாண்டுகளில் நமது மண்வாசத்தில் எழுதிய நூறு தலையங்கங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ;

Read More ...

Related Post