பேரா.பெ.விஜயகுமார்;
‘செல்லாத பணம்’ நாவலாசிரியர் இமையம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியரான இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ’செடல்’, ’செல்லாத பணம்’ போன்ற நாவல்கள், பெத்தவன் என்ற நெடுங்கதை மற்றும் ஏராளமான சிறுகதைகளை இமையம் எழுதியுள்ளார். ”தமிழ் எழுத்துலகின் கடந்த நூறாண்டு கால வளர்ச்சியில் இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலுக்கு இணையான வேறொன்று இல்லை” என எழுத்தாளர் சுந்தர ராமசாமி பாராட்டியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்ற இமையத்தின் ’செல்லாத பணம்’ நாவல் ஆங்கிலத்தில் ‘கி கீஷீனீணீஸீ ஙிuக்ஷீஸீt’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இந்நாவலைத் திரைப்படம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.;