மு. உமாதேவி சமூகச் செயல்பாட்டாளர்;
இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 657 பேர் கையால் துப்புரவு பணி செய்து வருகின்றன 9.6 மில்லியன் உலர் கழிவறைகளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாரம்பரிய கருவிகளை கொண்டு அதிலும் குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்பவர்கள் பெண்கள் தான் அதிகம். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வீட்டில் சமையல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு குழந்தைகளை எழுதுவதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பி பணி செய்யும் இடத்திற்கு காலை 5:45 மணிக்கு வந்து காலை 6 மணிக்கு மாஸ்டர் கையெழுத்து போட்டுவிட்டு எங்களது குப்பை வண்டி மற்றும் பாரம்பரிய கருவிகள் உடை கரண்டி ஆகிய பொருட்கள் எடுத்துக்கொண்டு பணி செய்யும் இடங்களுக்கு சென்று பணியை தொடங்கி விடுவோம் என்று மூச்சுவிடாமல் கூறுகிறார்கள் பெண் தூய்மைப்பணியாளர்கள்.;