என். ஆர். சரஸ்வதி, ஆசிரியை, திருவனந்தபுரம் ;
பேருந்தில், ஜன்னலோர பயணம் இதமான காற்று ஸ்பரிசிக்க ஆனந்தம். காலை நேரக் காப்பியுடன், நாளிதழில் முழ்குவது நலமான ஆனந்தம். தோளில் தூக்கி நடந்த களைப்பிலும் பிள்ளையின் பாரம் தந்தைக்கு ஆனந்தம். தவறாகச் சொல்லும் மழலையின் தமிழ் தாய்க்கு ஆனந்தம். சாய்ந்து நிற்கும் விளைந்த நெற்கதிர்கள் விவசாயிக்கு ஆனந்தம். சங்கடங்கள் வரும் போதும் சஞ்சலமின்றி சாயாத நேர்மை மனதுக்கு ஆனந்தம். ஈரைந்து மணிநேர இருட்டைக், கிழிக்கும் கிழக்கு சேவலுக்கு ஆனந்தம்.;