ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;
பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிது புதிதாக உருவாகும் நுண்கிருமிகளின் பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றால் இன்றைய சூழலில் ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியாலேயே பல பேருடைய வாழ்நாட்காலம் நீடித்து வருகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கு, தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் வாங்கி பயன்படுத்த முடியும்.;