ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம்;
இன்றைக்குப் பள்ளி மாணவர்களிடையே நடைபெறும் மோதலின் பின்னணியில் ஏதோ ஒரு வடிவத்தில் சாதி மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானதாகும். அண்மையில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில்யிலான குழு முதல்வர் ஸ்டாலிடம் ஐந்தாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை அளித்தது. அதில் போலீஸ்காரர்களின் சம்பள உயர்வு, கல்வித்தகுதி உயர்வு, அவர்களுக்கான உடல்நலம் குறித்தும் சில பரிந்துரைகளை அளித்ததோடு சமுதாயத்தில் இருந்து சாதிவெறி அடியோடு போக்கப்படவேண்டுமானால் பள்ளிக்கூடங்களிலேயே சாதி வெறி ஒழிக்கப்படவேண்டும் என்றும் அதற்கான சில ஆலோசனைகளையும் அளித்துள்ளது.;