நீர் காக்க..

நீர் காக்க..

ஆசிரியர். திரு. ப. திருமலை நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகம் ;

வெயில் கொளுத்துகிறது. வெப்ப அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க வெப்ப அளவு அதிகரிக்கலாம் என்பதே தகவலாக உள்ளது. குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது. இந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில அணைகளில் நீர் இருப்புக் கணிசமாகக் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது, தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளுக்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படலாம் என்கிற அச்சத்தை, இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக்குறையாலும் அவதிப்படுகிறோம். இது நமது நீர் மேலாண்மையில் இருக்கும் குறை தானே தவிர இயற்கையில் தவறு அல்ல. அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம்;

Read More ...

Related Post