ஆடிட்டர் கலாவதி ஜெய்;
பெனோ செஃபின் சென்னையில் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஒரு நடுதரக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த சில மாதங்களில் இவருக்குக் கருவிழி இல்லாதது கண்டு பெற்றோர் அதிர்ந்துபோனார்கள். என்றாலும் அவர்கள் தளரவில்லை. கல்வியிலும் ஆளுமையிலும் தன் மகள் போற்றத்தக்கவளாக இருக்கவேண்டும் எனப் பெற்றோர் விரும்பினர். இவரைப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தபோது கண் பார்வையற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளி இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இருந்தது. சைக்கிளில் தன் மகளை 10 கி.மீ தூரத்திற்குக் கொண்டு போய், பின்பு 10 கி.மீ தூரம் திரும்பி கூட்டிக்கொண்டு வந்தார் தந்தை. தன் தந்தையில் சிரமத்ததை உணர்ந்து படிப்பில் நன்கு கவனம் செலுத்தினார். ஒவ்வொரு முறையும் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்று சிறந்த மாணவியாக வலம் வந்தார்.;