முனைவர் தினகரன் பேராசிரியர் பணிநிறைவு, மதுரைக்கல்லூரி.;
இன்னும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம் இப்பிரபஞ்சத்தில் வேறெங்காது உயிர் வாழ வழியிருக்கிறதா என்று! இருப்பினும் ஒரு சில கிரகத்தில் மட்டுமே பாக்டீரியாக்கள் வாழும் சூழல் உள்ளதேயின்றி, பல செல் உயிரிகள் வாழ்வதற்கான சூழலும், தகவமைப்புகளும் இல்லை. அப்படியே பரிணாமத்தில் ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகளாக பரிணமிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிடும். சூரியனை கூட எத்தனை ஆண்டுகள் வாழும் என கணிக்கும் திறன் நமக்கு உண்டு. தொடர்ச்சியான ஹைட்ரஜன் இணைவு ஹீலியமாகி, ஹைட்ரஜன் அயணிக்கள் நீர்த்துப்போகும் வரை சூரியன் இருக்கும். அதற்கு இன்னும் 450 கோடி ஆண்டுகள் ஆகலாம். சூரியன் உள்ளவரையிலும் இப்புவியும் இருக்கும். ஆனால் நாம் புவியின் வளங்களை நுகரும் வீரியத்தைப்பார்த்தால் இப்புவி நாம் வாழ தகுதியற்றதாய் போய்விடும். இப்பெரிய சீர்கேடுகளுக்கு மனிதனே பெரும் காரணம்.;