வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!

வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!

முனைவர் இல. இராசி கண்ணன், உதவிப்பேராசிரியர், கணினி அறிவியல் துறை, அரசு பொறியியற் கல்லூரி திருவரங்கம்;

புத்தாடைகள், அறுசுவை உணவு, கூடுதலாக இனிப்பு வகைகள், உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பு, புதிய திரைப்படம் இப்படிப் பல இருந்தாலும் பட்டாசு இல்லாவிட்டால் தீபாவளி முழுமைபெறாது. இன்றைக்குத் தீபாவளிக்கு மட்டுமல்ல. அனைத்து விசேடங்களுக்கும் பட்டாசு வெடித்தல் என்பது கட்டாயம் என்றாகிவிட்டது. தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கக் காலவரைமுறை நிர்ணயித்தாலும் அவையெல்லாம் அநாயசமாக மீறப்படுவதைப் பார்க்கிறோம். கிராமத் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், இறப்பு போன்ற நிகழ்வுகளிலும், அரசியல் பொதுக்கூட்டங்கள் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளுக்காகப் பட்டாசுகளின் தேவை ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.;

Read More ...

Related Post