கூடும் கூட்டம் பலியாகும் உயிா்கள்...

கூடும் கூட்டம் பலியாகும் உயிா்கள்...

எழுத்தாளர் ப. பெருமாள் மைந்தன்;

இந்தியாவில் வெற்றி என்பதை நிர்ணயிக்க, கூடும் கூட்டத்தின் அளவும் ஒரு காரணியாக வரையறுக்கப்பட்டுள்ளது. அது தானா சேர்ந்த கூட்டமானாலும் சரி.. அழைத்து வரப்பட்ட கூட்டமானாலும் சரி. பொதுவாக அரசியல் நிகழ்வுகள், மதத் தொடர்பான விழாக்கள், நடிகரின் புதுப்பட ரிலீஸ் போன்றவற்றிற்குக் கட்டுப்படுத்தமுடியாத கூட்டம் கூடுவதைக் காணமுடிகிறது. அப்படித்தான் தலைநகர் புதுதில்லிக்குத் தென்கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் புல்ராய் கிராமத்தின் திறந்தவெளி மைதானத்தில் போலே பாபா என்கிறவரின் ஆன்மிக உரையைக் கேட்பதற்காக லட்சக்கணக்கானோர் திரண்டனர்.;

Read More ...

Related Post