தேசிய நல்லாசிரியர் விருதாளர் ந. பாலமுருகன் தமிழாசிரியர் - எழுத்தாளர் அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனூர். பொள்ளாச்சி;
பரிணாம வளர்ச்சியில் மனித இனம் உருவான நாள் முதலாக இன்று வரை கோடிக்கணக்கான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் சிறந்தவை எனப் பட்டியலிட்டால் முதல் பத்து இடமாக இருந்தாலும் சரி, பத்தில் முதலிடமாக இருந்தாலும் சரி அது மொழியாக மட்டுமே இருக்கும். உள்ளிருந்து வரும் உருவமில்லாக் காற்றினை வேறுபட்ட ஓசைகளால் வெளிக்கொண்டு வருகிறது உயிரினங்கள். அவற்றில் மனித இனம் மட்டும்தான் அந்த ஓசைகளுக்கு குறிப்பிட்ட வடிவங்களைத் தருகிறது. கேட்கும் ஒவ்வொரு ஓசைகளுக்கும் வடிவத்தைப் படைத்ததே அனைத்து கண்டுபிடிப்புகளுக்குமான மையப்புள்ளியாக இருக்கின்றது. இதுவே நேற்றும் இன்றும் என்றும் சிறந்த ஒன்றாக இருக்கும்.;