சோ. இளமுகில், திட்டத்தலைவர், தானம் அறக்கட்டளை ;
பொட்டச்சிங்களாம் சேர்ந்து என்னத்த சாதிச்சிற போறாங்கானு நாங்களும் பாத்துடுறோம்? அப்படினு ஊருக்கார ஆம்பிளைங்கப் பேசுரப்பலாம் பொறுமையாதான் கடந்துபோனோம். நமக்கு காரியமா? வீரியமானா? காரியம்தான், என்று தொடங்கினார் குதிரைக்குத்தி கிராமத்தை சேர்ந்த களஞ்சிய தலைவி, போ.ஞான செல்வம். 2016-17 களில், பருவமழைகள் தொடர்ந்து பொய்த்தன. அப்போது, நீரின்றி கண்மாய்கள் வறண்டு கிடந்தபோது, மதுரை புறவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் குத்தகைதாரர்கள், மண் அள்ள, கண்மாய்களை குறிவைத்தனர். கண்மாயில் மண் அள்ளுவது என்றால் தூர்வாருவதோ, வண்டல் மண் அள்ளுவதோ கிடையாது. தோதான இடத்தில், கிடைத்தவரை லாபம் என்று கிடங்கு கிடங்காக, கொண்டாங்கூறாக தோண்டி எடுப்பது. கண்மாயில் மண் அள்ள அனுமதித்தால் ஊருக்கு பொதுவா பணம் தருகிறோம் என்றனர். ;