எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

இன்றைக்கு வேலையில்லா பிரச்சனை படித்த இளைஞர்களை உலுக்கியெடுக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது, தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தான் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லியிருக்கிறது அண்மையில் வெளியான அன்ஸ்டாப் என்னும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை. தற்போது கல்லூரிகளுக்கான அட்மிஷன் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து சிந்திப்பது மிகமிக அவசியமானது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுக்க 37,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல நிறுவனங்களைச் சேர்ந்த 500 மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோரிடம் விரிவான கணக்கெடுப்பை மேற்கொண்டு, திறன் அறிக்கை 2026ஐ அன்ஸ்டாப் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.


சுகர் பேபியும்... இரத்த அருவியும்...
சுகர் பேபியும்... இரத்த அருவியும்...

கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்

குட்மார்னிங் தாத்தா.. என்ன அதுக்குள்ள எழுந்திருச்சிட்டீங்களா..!! any hot news or good news? பேச்செல்லாம் நல்லா பேசு. காலையில எந்திரிக்கிற நேரமா இது? அவனவன் காலையில் எழுந்திச்சு, எட்டு வயசில சாதனை நிகழ்த்திட்டு இருக்கான் நீ தூங்கிட்டு இருக்க.. என்ன தாத்தா கிண்டர் ஜாய் சாப்பிடுற வயசுல இருக்குற பையனை சொல்லிப் பதறவைக்ககுறீங்களே..!! குழந்தை.. குழந்தையா இருக்கணும். சொல்லுங்க.. உன்னப் பதறல்லாம் வைக்கல. உண்மையைத்தான் சொல்றேன். அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளான். சுமார் நான்கு ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஏய்டன், அணுக்கரு இணைவை நிகழ்த்திய உலகின் மிக இளைய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைக்க முயற்சி செய்து வருகிறான்.

June  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

இன்றைக்கு வேலையில்லா பிரச்சனை படித்த இளைஞர்களை உலுக்கியெடுக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது, தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தான் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லியிருக்கிறது அண்மையில் வெளியான அன்ஸ்டாப் என்னும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை. தற்போது கல்லூரிகளுக்கான அட்மிஷன் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து சிந்திப்பது மிகமிக அவசியமானது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுக்க 37,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல நிறுவனங்களைச் சேர்ந்த 500 மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோரிடம் விரிவான கணக்கெடுப்பை மேற்கொண்டு, திறன் அறிக்கை 2026ஐ அன்ஸ்டாப் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

தலையங்கம் கட்டுரைகள்

சமூகம்

பாரம்பரியம்

ஈரானில் உருவாகிய ராம்சார் ஈர நில தளங்கள்

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை

ஈர நிலங்கள் பூமியின் மிகவும் வளமானச் சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள், மாங்குரோவ் காடுகள், வெள்ளச்சமவெளிகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள் மற்றும் நீர் தேக்கங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் இதில் அடங்கும், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், மில்லியன் கணக்கான மக்களுக்கு, நீர், உணவு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை சீரமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றன. இருப்பினும் விரைவான நகரமயமாக்கல், மாசுபாடு, காடழிப்பு, கால நிலை மாற்றம் மற்றும் அதீத சுரண்டல் ஆகியவை உலகம் முழுவதும் ஈர நிலங்களுக்குச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன. 1971ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் உருவாகிய ராம்சார் சாசனம் அல்லது ஈரநிலங்களின் பாதுகாப்பு சாசனமானது, உலகம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய ஈர நிலங்களைக் கண்டறிந்து, அவற்றின் சுற்றுச்சூழல் கூறுகள், செயல்முறைகள் மற்றும் நன்மைகளைப் பாதுகாப்பதன் மூலம் மனித வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

வாழ்வியல்

பெற்றோர்