ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.
நடைபாதையின் முக்கியத்துவம் குறித்து ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு முறை உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, சாலைகளில் நடைபாதையின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. “நடைபாதைகளில் நடப்பது பாதசாரிகளின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றவேண்டும்” என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.. கர்நாடகத்தைச் சேர்ந்த ஷேகரியா, தனது 5 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக நடந்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி சிறுவன் மீது மோதியதில், அவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் “நடப்பதற்கான உரிமை” என்பது பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 19இன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும்.
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்
தாத்தா..This is too much. நீங்க ஏன் காலையில இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சீங்க ஓஹோ!! நீ தாமதாய் எழுந்திருச்சுட்டு எங்கிட்ட சண்டைக்கு வர்றியா. ஆமா நேத்து ஞாயிற்றுக்கிழமைதானே. மதியம் நல்லா தூங்கியிருப்பாய். இருந்தாலும் இப்ப காலையில் ஏன் லேட்டா எந்திருச்சு வர்ற. நேத்து மத்தியானம் எங்க தூங்க விட்டாங்க.. ஒரே கார் சத்தம், பைக் சத்தம், பக்கத்துவீட்டு பில்டிங் வேலை சத்தம். பேசாம ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கூல் வக்கச் சொல்லணும். கிளாஸ்லதான் நல்லா தூக்கம் வருது. நேத்து மத்தியானம் நல்லாவே தூங்கலை தாத்தா. அதுசரிதான். சத்தமே வரக்கூடாது என்றால் உனக்கு பின்லாந்து நாட்டிலுள்ள பாதுகாப்பு அரணுக்குள்தான் இடம் பிடிக்க வேண்டும்.