பெண்களுக்குச் சாத்தியமாவது எப்போது?
பெண்களுக்குச் சாத்தியமாவது எப்போது?

ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

இந்தியத் தொழிலாளர் சந்தைக் குறியீடுகள் குறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகம், அண்மையில் இந்தியாவின் 46 பெருநகரங்களில் வசிக்கும் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் 69 சதவிகிதம் பேர் குழந்தையையும் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என்பதால் வேலைக்குச் செல்லமுடியாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹெளரா நகரில் 83 சதவிகிதம், குஜராத்தின் கூரத் நகரில் 81சதவிகிதம் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 78 சதவிகிதம் பெண்கள் வீட்டு வேலைகளால் வெளியே பணிக்குச் செல்வதில்லை.


செய்திகளைச் சொல்லும் நாவல்... மாம்பழம்... கொய்யா பழம்...
செய்திகளைச் சொல்லும் நாவல்... மாம்பழம்... கொய்யா பழம்...

கலைமாமணி பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன்.

காலை வணக்கம் தாத்தா.. ஏன் உன் நாக்கு நீல நிறத்தில் இருக்கிறது? தாத்தா, Im a Purple girl, பயப்படாதீங்க. அம்மா, நேத்து நாவல்பழம் வாங்கிட்டு வந்தாங்க, நைட்டுல சாப்பிட்டேன். அப்படியே தூங்கிட்டேன். So, நாக்கு கலர் மாறிருச்சு. அதுசரி தாத்தா, நாவற்பழங்களை, சாப்பிட்டவுடன் நாக்கு ஏன் நிறம் மாறுகிறது? இதனால any Problem? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாவல்பழம் கோடைகாலத்தில் கிடைக்கும் ஆரோக்கியமான பழம். சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளித்துவிட்டு நீ தூங்கியிருக்கணும். பொதுவாக நமது நாக்கின் மேற்பரப்பில் பாப்பிலே (Papillae) எனப்படும் சிறிய மொட்டுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். நாவற்பழத்தின் சாறு இந்த மொட்டுகளின் மேல் படியும்போது, அவை அந்த நிறத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் நாக்கு தற்காலிகமாக நிறம் மாறுகிறது. இது முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதனால் உடலுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாது.

August  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

பெண்களுக்குச் சாத்தியமாவது எப்போது?

ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.

இந்தியத் தொழிலாளர் சந்தைக் குறியீடுகள் குறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகம், அண்மையில் இந்தியாவின் 46 பெருநகரங்களில் வசிக்கும் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் 69 சதவிகிதம் பேர் குழந்தையையும் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என்பதால் வேலைக்குச் செல்லமுடியாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹெளரா நகரில் 83 சதவிகிதம், குஜராத்தின் கூரத் நகரில் 81சதவிகிதம் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 78 சதவிகிதம் பெண்கள் வீட்டு வேலைகளால் வெளியே பணிக்குச் செல்வதில்லை.

சமூகம்

பாரம்பரியம்

பண்டைய கல்வெட்டு மரபு

கே.பி.பாரதி மேம்பாட்டுக்கானச் சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை.

கல்வெட்டுகள் அல்லது கல்வெட்டு குறிப்புகள் மனித தகவல் தொடர்பான மிகவும் நீடித்த மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக விளங்குகின்றன. எளிதில் உடையக் கூடிய பாப்பிரஸ் சுருள்கள், தோல் சுருள்கள் அல்லது வாய்மொழி மரபுகளைப் போலில்லாமல் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் வரலாற்றுத் தருணங்களின் உறுதியான நேரடியான செய்திகளை வழங்குகின்றன. பொதுவாக கல்வெட்டுகளில் இரு தன்மைகளை அறியலாம். முதலாவதாக அரசியல், மதம், மற்றும் பொருளாதார யதார்த்தங்களை மீட்டுருவாக்கம் செய்யும் முதன்மைச் சான்றுகளாகக் காணப்படுகின்றன. நவீன தேசிய அடையாளங்களையும், மொழியியல் ஆய்வுகளையும் தொடர்ந்து ஒரு சமூக அரசியல் மரபாக ரோசெட்டா கல், அசோகரின் ஆணைகள் மற்றும் ஹம்முராபியின் சட்டம் போன்ற முக்கிய எடுத்துக்காட்டுகள் மூலம் பண்டைய அதிகாரத்திற்கும் சமகால வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கும் இடையிலான இடைவெளியை கல் பதிவுகள் இணைக்கிறது.

பாரம்பரியம் கட்டுரைகள்

வாழ்வியல்

மருத்துவம்

நுரையீரல் நமது உடலின் சலவைக்காரர்...

டாக்டர் ஃபரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கை.

நமது உடலின் சலவைக்காரர்களாக செயல்படுபவை நமது நுரையீரல்கள். இவை நமது இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி விட்டு ஆக்சிஜனை மீண்டும் இரத்தத்தில் ஏற்றும் வேலையை பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்துத் தொய்வின்றி நமது நுரையீரல்கள் செய்து வருகின்றன. இந்த நுரையீரலில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டின்றி வளர்ச்சி அடையும் போது புற்று நோய் உண்டாகிறது. உலக அளவில் கண்டறியப்படும் புற்று நோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்று நோய் ஆகும். வருடந்தோறும் 1 மில்லியன் மரணங்களுக்கு மேல் ஏற்படுத்தும் கொடிய நோயாக - நுரையீரல் புற்று நோய் உள்ளது.