”தயங்காதீர்கள்... தன்னம்பிக்கையோடு இருங்கள்...“
”தயங்காதீர்கள்... தன்னம்பிக்கையோடு இருங்கள்...“

அருள்நிதி பகவதிமோதிலால்

ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளிச்சம் போட்டுக்காண்பித்து வருகிறது. அதுபோலவே பெண்கள் தற்கொலையும் அதிலும் குறிப்பாகத் திருமணமான இல்லத்தரசிகளின் தற்கொலையும் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. உலகப் பெண் மக்கள்தொகையில் இந்திய பெண்கள் 18 சதவிகிதத்தினர் உள்ளனர். ஆனால் உலகளாவிய பெண் தற்கொலை இறப்புகளில் 36 சதவிகிதம் இந்தியப் பெண்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குடும்பப் பெண்கள் தற்கொலைக்குக் குடும்ப வன்முறை, மனஅழுத்தம், பொருளாதாரச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் எனப் பல காரணங்கள். தற்கொலையைத் தவிர்க்க பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். என்ன செய்யலாம்..?

March  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

”தயங்காதீர்கள்... தன்னம்பிக்கையோடு இருங்கள்...“

அருள்நிதி பகவதிமோதிலால்

ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளிச்சம் போட்டுக்காண்பித்து வருகிறது. அதுபோலவே பெண்கள் தற்கொலையும் அதிலும் குறிப்பாகத் திருமணமான இல்லத்தரசிகளின் தற்கொலையும் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. உலகப் பெண் மக்கள்தொகையில் இந்திய பெண்கள் 18 சதவிகிதத்தினர் உள்ளனர். ஆனால் உலகளாவிய பெண் தற்கொலை இறப்புகளில் 36 சதவிகிதம் இந்தியப் பெண்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குடும்பப் பெண்கள் தற்கொலைக்குக் குடும்ப வன்முறை, மனஅழுத்தம், பொருளாதாரச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் எனப் பல காரணங்கள். தற்கொலையைத் தவிர்க்க பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். என்ன செய்யலாம்..?

சமூகம்

குறள்

நல்லதைக் கேளுங்க... பெருமையைச் சேருங்க...

வசந்தா பாபாராஜ் சென்னை

அந்த ஊரில் சீனு, வேணு என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு இலக்கிய பேச்சினைக் கேட்பதில் ஆர்வம் அதிகம். டே! சீனு எங்கடா போற என்று கேட்டான் வேணு. நம்ம ஊரு ஆலமர மேடையில குறள்நெறிக் குரிசில் பேசுராறு. கேட்கப் போறேன். நீயும் வர்ரியா என்றான். சரி நானும் வரேன். அவர் நல்லா பேசுவாரு. வா போகலாம். இவர்கள் போவதற்கும் அவர் பேச்சைத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. இன்றைய நாள்களில் மேடைப் பேச்சு அதிகமாக உள்ளது. அனைத்தும் நம்மை வழிநடத்தும் நல்ல கருத்துகளே! ஆனால் அளவுக்கு அதிகமாகும் பொழுது மனம் தடுமாறுகிறது. ஒரு சிலர் பேச்சு தெளிவாக இருப்பதில்லை.

மருத்துவம்

பெண்களின் உடல்பருமன் அழகா? ஆபத்தா?

டாக்டர் ராதாருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை

கொஞ்சம் உடல் பருமனனோடு இருப்பவர்களை ஆராதிக்கும் தேசத்தில்தான் இருக்கிறோம். உடல்பருமன் என்பது ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகி மாறி வருகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Famil Health Survey NFHS-5 (2019 – 2021) தரவுகளை NFHS-4 (2016 – 2019) தரவுகளுடன் ஒப்பிடும்போது, பல இடங்களில் பெண்களின் உடல்பருமன், மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் 40.5 சதவிகிதம், கேரளாவில் 38.2 சதவிகிதம், ஆந்திராவில் 36.3 சதவிகிதம், புதுச்சேரியில் 46.3 சதவிகிதம், டெல்லியில் 41.4 சதவிகிதம், பஞ்சாபில் 44 சதவிகிதம் என்ற விகிதத்தில் இந்த ஐந்தாண்டு இடைவெளியில் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழல்

நீர் மேலாண்மையில் பெண்கள்...

எழுத்தாளர் இராம.பெருமாள் ஆச்சி, திருச்சி.

பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யாதே என்பது சொலவடை. இன்றைய வாழ்க்கையில் தண்ணீருக்காகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டிய சூழல். சிறு கிராமத்தில் என் பால்யத்தின் நீர் வறண்ட நாட்களில் அதிகாலையில் குடம் வாளியுடன் சென்று. ஊர்க்கிணற்றின் நடுவில் கொஞ்சமாய்க் கலங்கலாய்க்கிடக்கும் ஊற்று நீரைச் சக பெண்களுடன் போட்டி போட்டு இறைத்து கசடுகளைத் துணியால் வடிகட்டி ஒட்டுக்கிணறுத்தண்ணீர் இறைத்த அனுபவங்கள் பசுமரத்தாணிகள் போன்றவை. அந்த ஒன்றிரண்டு குடங்களே அன்றைய குடிநீருக்கும், உணவுத்தேவைகளுக்குமானது. அந்நீரில் தேத்தான் கொட்டையை அடியில் உரசி நீரைத் தெளிய வைத்து பருகிய காலங்கள் கேன்களில் குடிநீர் வாங்கும் நகர வாழ்க்கை என்னைக் கேலியாய்ப் பார்த்துச் சிரிக்கும். இன்னும் சில கிராமங்களில் பெண்கள் தலையிலும், இடுப்பிலும் குடங்களைச் சுமக்கும் நிலைமை முழுவதும் மாறவில்லை.

சுற்றுச்சூழல் கட்டுரைகள்