கவனித்தலும் கரிசனம் கொள்ளுதலும்....
கவனித்தலும் கரிசனம் கொள்ளுதலும்....

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்.

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் பயணிக்கும் பாதை குறித்தான கவலை நம்மைத் துரத்துகிறது. பள்ளி திறந்த நாளிலேயே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் போதை சவகாசத்தால் கொலையான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுபோல நெல்லை அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் விதிமுறையை மீறி பயணித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரை போலீசார் தடுத்து, வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்து பெற்றோருடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு தயாரித்து, நள்ளிரவில் புறக்காவல் நிலையத்தின் மீது வீசியிருக்கின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் ஒருவர் மது அருந்தியிருந்தார். இந்தச் சம்பவம் அவர்களின் படிப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.


பள்ளியும் பதற்றமும்  ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்
பள்ளியும் பதற்றமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்

கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்

குட் மார்னிங் தாத்தா.. என்ன இப்பத்தான் பேப்பர் படிக்கிறீங்க..!! லேட்டா எந்திரிச்சீங்களா? ஓஹோ.. நீ லேட்டா எந்திரிச்சுட்டு நான் கேக்குறதுக்குள்ள நீ முந்திட்டு கேக்குறியா? இப்பச் சொல்லு.. ஏன் லேட்டு? ஸ்கூல் போக வேண்டாமா? போகணும்.. போகணும்... ஸ்கூல் என்றால் மீன்கள் கூட்டம் என எங்க மிஸ் சொன்னாங்களே? இதுக்கும் மீன் கூட்டத்துக்கும் ஸ்கூலுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை ஸ்கூல்ல மிஸ் I mean.. You mean.. அப்டீன்னு சொல்றாங்களே.. அதான் காரணமா? அந்த Mean.. இல்ல.. இந்த மீன்.. சொல்றேன். கேளு.. பொதுவாக மீன் குழுக்களை அறிவியல் ரீதியில் “ஷோல்” (Shaal) மற்றும் “ஸ்கூல்” (School) என இரண்டு வகையாகச் சொல்வார்கள். மீன்கள் பாதுகாப்புக்காகவோ, உணவுக்காகவோ ஒன்றாக சேர்ந்து தங்களுக்கு தோன்றியபடி நகரும்போது அதை “ஷோல்” எனச் சொல்வார்கள்.

July  Full PDF


இம்மாத இதழில்

தலையங்கம்

கவனித்தலும் கரிசனம் கொள்ளுதலும்....

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்.

இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் பயணிக்கும் பாதை குறித்தான கவலை நம்மைத் துரத்துகிறது. பள்ளி திறந்த நாளிலேயே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் போதை சவகாசத்தால் கொலையான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுபோல நெல்லை அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் விதிமுறையை மீறி பயணித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரை போலீசார் தடுத்து, வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்து பெற்றோருடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு தயாரித்து, நள்ளிரவில் புறக்காவல் நிலையத்தின் மீது வீசியிருக்கின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் ஒருவர் மது அருந்தியிருந்தார். இந்தச் சம்பவம் அவர்களின் படிப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

சமூகம்

இலக்கியம்

அறிவியல்

குழந்தைகளுக்குத் தொடர் மூட்டுவலியா... ஜாக்கிரதை...

டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், சிவகங்கை

பதினாறு வயதுக்குட்பட்ட சிறார் சிறுமியிடத்தில் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் மூட்டுகள் சார்ந்த அழற்சி நோய்க்கு, குழந்தைப்பருவ மூட்டழற்சி (Juvenile Arthritis) என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கான காரணம் இன்னதென இன்னும் அறியப்படாதமையால், ஜூவனைல் இடியோபதிக் ஆர்த்ரைட்டிஸ் (Juvenile Idiopathic Arthritis) என்று அழைக்கிறோம். இடியோபதிக் என்றால் மருத்துவ அறிவியல் ரீதியாக காரணம் அறியப்படாத நோய் என்று அர்த்தம். ஆலிகோ ஆர்த்ரைட்டிஸ் (சில மூட்டுகளை மட்டும் உள்ளடக்கிய நோய்), ரியுமடாய்ட் ஃபேக்டர் பாசிடிவ் பாலி ஆர்த்ரைட்டிஸ், ரியுமடாய்ட் ஃபேக்டர் நெகடிவ் பாலி ஆர்த்ரைட்டிஸ், சிஸ்டமிக் ஆர்த்ரைட்டிஸ், சோரியாட்ரிக் ஆர்த்ரைட்டிஸ், எண்திசைட்டிஸ் தொடர்புடைய ஆர்த்ரைட்டிஸ், மாற்றமற்ற ஆர்த்ரைட்டிஸ் ஆகிய ஏழு வகையான மூட்டழற்சி நோய்களை இந்த ஜூவனைல் ஆர்த்ரைட்டிஸ் எனும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வரலாம்.

வாழ்வியல்