ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.
இந்தியத் தொழிலாளர் சந்தைக் குறியீடுகள் குறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகம், அண்மையில் இந்தியாவின் 46 பெருநகரங்களில் வசிக்கும் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் 69 சதவிகிதம் பேர் குழந்தையையும் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என்பதால் வேலைக்குச் செல்லமுடியாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹெளரா நகரில் 83 சதவிகிதம், குஜராத்தின் கூரத் நகரில் 81சதவிகிதம் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 78 சதவிகிதம் பெண்கள் வீட்டு வேலைகளால் வெளியே பணிக்குச் செல்வதில்லை.
கலைமாமணி பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன்.
காலை வணக்கம் தாத்தா.. ஏன் உன் நாக்கு நீல நிறத்தில் இருக்கிறது? தாத்தா, Im a Purple girl, பயப்படாதீங்க. அம்மா, நேத்து நாவல்பழம் வாங்கிட்டு வந்தாங்க, நைட்டுல சாப்பிட்டேன். அப்படியே தூங்கிட்டேன். So, நாக்கு கலர் மாறிருச்சு. அதுசரி தாத்தா, நாவற்பழங்களை, சாப்பிட்டவுடன் நாக்கு ஏன் நிறம் மாறுகிறது? இதனால any Problem? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாவல்பழம் கோடைகாலத்தில் கிடைக்கும் ஆரோக்கியமான பழம். சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளித்துவிட்டு நீ தூங்கியிருக்கணும். பொதுவாக நமது நாக்கின் மேற்பரப்பில் பாப்பிலே (Papillae) எனப்படும் சிறிய மொட்டுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். நாவற்பழத்தின் சாறு இந்த மொட்டுகளின் மேல் படியும்போது, அவை அந்த நிறத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் நாக்கு தற்காலிகமாக நிறம் மாறுகிறது. இது முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதனால் உடலுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாது.